ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

விஜய் பட வில்லனும் அஜித் படத்தின் குழந்தை நட்சத்திரமும் இணையும் புதிய படம்! 

அர்ஜீன் தாஸ், அனிகா சுரேந்திரன் இணைந்து நடித்துள்ள ‘புட்ட பொம்மா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :7 நவம்பர் 2022, 3:07 pm IST

அர்ஜீன் தாஸ், அனிகா சுரேந்திரன் இணைந்து நடித்துள்ள ‘புட்ட பொம்மா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

கைதி, மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அர்ஜீன் தாஸ் வசந்தபாலன் இயக்கும் ‘அநீதி’ படத்தில் நடித்து வருகிறார்.  இவர் முதன் முறையாக ‘புட்ட பொம்மா’ எனும்  தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார். இதில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் மகளாக நடித்த அனிகா சுரேந்தரன் மற்றும்  சூர்யா வசிஸ்டரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தினை சந்திரசேகர் டி ரமேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

தனுஷின் வாத்தி படத்தின் தயாரிப்பாளர் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்படும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கணேஷ் குமார் ரவுரி என்பவர் வசனம் எழுதியுள்ளார். டீசரின் இறுதியில் பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.