35 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல் - மணிரத்னம்!

கமல்ஹாசன் - மணிரத்னம்- ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது. 
35 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல் - மணிரத்னம்!

'நாயகன் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவருடைய அடுத்ததடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

அந்தவகையில், ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதுகுறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், மணிரத்னம் - கமல்ஹாசன் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. 

அதன்படி, கமல்ஹாசனின் 234- வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது. 

தற்போது கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 படப்பிடிப்பிலும் பிக்பாஸிலும் பிசியாக இருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com