கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

ரஜினி மகளுக்கு மெட்டு போடும் ரஹ்மான்! 'லால்சலாம்' அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கும் ’லால் சலாம்’ படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :25 நவம்பர் 2022, 7:33 pm IST


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கும் ’லால் சலாம்’ படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமையக்கவுள்ளார்.

அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் படத்திற்கு பாடல்கள் அமைக்கும் பணிகளில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், ஏ.ஆர். ரஹ்மானும் ஈடுபட்டுள்ளனர். 

ஏ.ஆர். ரஹ்மான் கடும் சுமைகளுக்கு மத்தியில், ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பாடலமைக்கும் வகையில் ரீல்ஸ் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், மிகவும் நம்பிக்கைக்குரிய பெண் இயக்குநருடன் திணறுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். மேலும், ஹேஷ்டேக் தமிழ் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடியோவுக்கு கீழ் ரஹ்மானின் ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.  

'லால்சலாம்' படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.