எழுத்தாளரும் பிரபல நடிகருமான வேல.ராமமூர்த்தி பெயரில் பணமோசடி நடைபெற்றுள்ளது.
‘குற்றப் பரம்பரை’ நாவல் மூலம் பிரபலமானவர் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. அதன்பின், சில திரைப்படங்களுக்கு வசனம் எழுத்தினார்.
தற்போது, முழுநேர நடிகராக அசத்தி வருகிறார். ‘கிடாரி’ படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் ‘என் பெயரில் கணக்கு தொடங்கி சிலர் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் தளங்களிலிருந்து என் பெயரில் நட்பு அழைப்பு வந்தால் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










