பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

'ரோஜா சீரியலின் கடைசி நாள்'! சன் டிவி தொடரின் நாயகன் உருக்கம்!

நான்கு ஆண்டுகள் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்த தொடர்களில் முக்கியமான இடம் ரோஜா தொடருக்கு உண்டு.

Published On :1 பிப்ரவரி 2024, 4:28 pm IST


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர் தனது இறுதி அத்தியாத்தை எட்டியுள்ளது. ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

சன் தொலைக்காட்சியில் மாலை 'பிரைம் டைம்' தொடராக ரோஜா ஒளிபரப்பாகி வருகிறது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா', தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

முழுமையாக நான்கு ஆண்டுகள் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்த தொடர்களில் முக்கியமான இடம் 'ரோஜா' தொடருக்கு உண்டு. அந்த அளவிற்கு பல குடும்பங்களில் விருப்பமான தொடராக இருந்துவருகிறது 'ரோஜா'.

Story image

தற்போது ரோஜா தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அந்த தொடரில் அர்ஜுன் என்ற முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்த சிபு சூர்யன் தெரிவித்துள்ளார். 

Story image

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலான அழகான பயணம். நூற்றுக்கணக்கான நினைவுகளுடன் அளவுகடந்த அன்பு கிடைத்த ஆண்டுகள். 

இன்று என்னுடைய படப்பிடிப்பின் இறுதி நாள். பலராலும் நேசிக்கப்பட்ட அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தை என்னை நம்பி  எனக்களித்த சரிகம தயாரிப்பு நிறுவனத்துக்கும் சன் தொலைக்காட்சிக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

என் மீதான அன்புக்கும், எனக்களித்த ஆதரவுக்கும் எனது நன்றியும், அன்புகளும். உங்கள் அன்புக்கு என்றுமே கடமைப்பட்டவனாக இருப்பேன். விரைவில் உங்களைச் சந்திப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.