சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடர் முடிவுக்கு வருவதையொட்டி, அந்தத் தொடரின் நாயகி பிரியங்கா நல்கார் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பலரால் ரசிக்கப்பட்ட தொடர் ரோஜா. இளைஞர்களைக் கவரும் வகையில் ரோஜா - அர்ஜுன் காட்சிகள் இருப்பதால், பல இளம் தலைமுறையினரும் ரோஜா தொடருக்கு அடிமையாகியுள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பிடிக்கத் தவறியதில்லை ரோஜா தொடர்.
பல இல்லத்தரசிகளின் விருப்பமான தொடராக இருந்ததால், மாலையிலிருந்து இரவு நேரத்திற்கு ரோஜா தொடர் மாற்றப்பட்டது. ஒளிபரப்பு செய்யும் நேரம் மாற்றப்பட்டாலும், அதற்கான ரசிகர் பட்டாளம் மட்டுமே மாறவேயில்லை. மாறாக கூடிக்கொண்டே சென்றது.
இதனால், ரோஜா தொடரில் ரோஜா - அர்ஜுன் என்ற முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் பிரியங்கா நல்கார், சிபு சூர்யன் ஆகியோருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.
அப்படிப்பட்டத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அந்தத் தொடரின் நாயகி பிரியங்கா நல்கார் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கன்னட நடிகையான பிரியங்கா நல்கார், ரோஜா தொடரின் பயணத்தில் தமிழ் கற்றுக்கொண்டார். இதனால், ரோஜா தொடரின் கடைசிநாள் படப்பிடிப்புப் புகைப்படத்தைப் பகிர்ந்து தமிழிலேயே பதிவிட்டுள்ளார்.
அதில், என் வாழ்க்கையில் நான் இந்த நான்கு ஆண்டுகள் மறக்க முடியாத பயணம். ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாமல் இங்க வந்த என்னை நீங்கள் எல்லோரும் உங்கள் வீட்டுப் பெண்ணாக ஏத்துக்கிட்டீங்க!.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிறைய நிறைய அன்பும் பாசமும் எனக்காக நீங்க எல்லோரும் கொடுத்து இருக்கீங்க. உங்களோட அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல. ஆனா இந்த அளவுக்கு எல்லாம் நான் பாக்கியசாலினு தோணுது!
தொடரில் மட்டும் இல்லாமல் உங்கள் அனைவரின் இதயத்திலும் ரோஜாவாக இருக்க எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சரிகம மற்றும் சன் தொலைக்காட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறைய நினைவுகளோடு, நல்ல உள்ளங்களோடு அன்பு ஆசிர்வாதத்துடன் நான் ரோஜா விடைபெறுகிறேன். இது முடிவில்லாத இன்னொரு புதிய ஆரம்பம். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


