16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பொங்கலுக்கு 'வாரிசு'- 'துணிவு' மோதுவது உறுதி - பிரபலம் சொன்ன தகவல்

பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் வெளியாவது உறுதி என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

Published On :

பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் வெளியாவது உறுதி என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து துணிவு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் பரவியது. நடிகர் விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதால் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்பட்டது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் ஜில்லா, நடிகர் அஜித்தின் வீரம் படமும் வெளியாகியிருந்தது.  மீண்டும் 7 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் படமும், நடிகர் அஜித்தின் படமும் வெளியாகவிருக்கிறது. 

இந்த நிலையில் இதனை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜனவரி 12 ஆம் தேதி துணிவு படமும், ஜனவரி 13 ஆம் தேதி வாரிசு படமும் வெளியாகும். இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் நிச்சயம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.