கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் படத்தைத் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களை அவர் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக தமிழில் அவர் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அண்மைகாலங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார்.
எனினும் யார் யார் நடிக்க உள்ளனர்? என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.