நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

''என்னால சிரிப்பை அடக்க முடியல'' - நடிகர் விக்ரம் பகிர்ந்த விடியோ

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்த விடியோவை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :26 அக்டோபர் 2022, 1:09 pm IST

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்த விடியோவை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார். 

பிரிட்டன் வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு இந்திய அளவில் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகியுள்ளது அந்நாட்டு மக்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. ''அவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர் நம் பிரச்னைகளை அவரால் சரியாக புரிந்துகொள்ள முடியாது'' என்று டிவி நிகழ்ச்சியில் ஒருவர் பேசியுள்ளார். 

'தி டெய்லி ஷோ' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இந்த விடியோவைப் பகிர்ந்து 'ஒருவரின் கொள்கை, திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர அவரது நிறத்தை மதிப்பிடக் கூடாது' என பேசியுள்ளார்.

இந்த விடியோவைப் பகிர்ந்த நடிகர் விக்ரம், ''இதைப் பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மன்னிக்கவும், இதனை பகிர வேண்டும் என நினைத்தேன். இந்தியாவுக்கு பெருமை. முதல் தமிழ் இந்தியன் அமெரிக்காவின் குடியரசு துணை தலைவர், இப்பொழுது முதல் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் பிரதமர்.  வா ராஜா வா'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.