ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மகள் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த், லைகா நிறுவனம் கொடுத்த புதிய அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த இரு படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 8:02 pm IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த இரு படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க  தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் இயக்க உள்ள இந்த இரண்டு படங்களில் ஒரு படத்திற்கான பூஜை வருகிற நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், லைகா நிறுவனம் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2, பொன்னியின் செல்வன் பாகம் 2 மற்றும் இந்தியன் 2 படங்களை தயாரித்து வருகிறது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.