ஆண்களிடம் சில சங்கடமான கேள்விகளை கேட்கக் கூடாது. கேட்கக் கூடாத சில கேள்விகளின் பட்டியல்:
* வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கும் இளைஞனிடம், இத்தனை வருடம் வெளியூர் சென்று சம்பாதித்தப் பணம் இவ்வளது தானா எனக் கேட்கக் கூடாது.
* தன் திருமணத்தை தள்ளி வைத்து இருக்கும் ஆணிடம், தலையில் முடி உதிர்ந்துவிட்டதே, இன்னும் திருமணம் ஆகவில்லையா எனக் கேட்கக் கூடாது.
* வேலை தேடும் இளைஞனிடம், எப்போது நீ பணிக்கு செல்வாய் எனக் கேட்கக் கூடாது.
* துன்பத்தில் அழும் இளைஞனிடம், பெண் பிள்ளை போல் ஏன் அழுகிறாய் எனக் கேட்கக் கூடாது.
* திருமணமாகி இருக்கும் இளைஞனிடம், இன்னும் குழந்கைகள் இல்லையா எனக் கேட்கக் கூடாது.
* சொந்த வீடு வாங்க இயலாத இளைஞனிடம், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா எனக் கேட்கக் கூடாது.
* வாகனம் ஓட்டத் தெரியாத இளைஞனிடம், வாகனம் வாங்கவில்லையா அல்லது வாகனம் ஓட்டத் தெரியாதா எனக் கேட்கக் கூடாது.