பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரபல நடிகையைத் திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் பிரபல நடிகைக்கும் திருமணம் நடைபெற்றது. 

Published On :

'நளனும் நந்தினியும்', 'நட்புனா என்னனு தெரியுமா', 'முருங்கைக்காய் சிப்ஸ்' போன்ற பல படங்களைத் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

யூடியூப் சேனல்களில் பிக்பாஸ் குறித்து விமர்சனம் செய்து மிகவும் பிரபலமானார். நக்கல் கலந்த இவரது பேச்சு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் இவர் சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

Story image

திருமண புகைப்படங்களை மகாலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ''என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். உங்கள் அன்பால் என் வாழ்க்கையை அழகாக்கிவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

'விடியும்வரை காத்திரு' என்ற படத்தை ரவீந்தர் தயாரித்துவருகிறார். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமான மகாலக்ஷ்மி கணவரைப் பிரிந்துவாழ்ந்துவரும் நிலையில் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.