கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

சிறந்த தொகுப்பாளருக்கான விருதை வென்றார் ஒபாமா!

சிறந்த தொகுப்பாளருக்கான ‘எம்மி’ விருதை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வென்றுள்ளார்.

News image

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா

Updated On :6 செப்டம்பர் 2022, 12:16 pm IST

சிறந்த தொகுப்பாளருக்கான ‘எம்மி’ விருதை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வென்றுள்ளார்.

ஒபாமாவும், அவரது மனைவி மிஷேலும் இணைந்து ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ என்ற தலைப்பில் ஆவணப்படத்தை அவர்களது தயாரிப்பு நிறுவனமான 'ஹையர் கிரவுண்ட்' மூலம் தயாரித்து கடந்த ஏப்ரல் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட்டனர்.

இந்த ஆவணப்படத்தில், உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தது. மொத்தம் ஐந்து பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்ந நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ ஆவணப்படத்திற்காக ஒபாமாவுக்கு சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

எம்மி விருதை பெற்ற இரண்டாவது முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1956-ஆம் டுவைட் டி. ஐசனோவர்ஸ் இந்த விருதை பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.