பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹூமா குரேஷி. ’கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்ற இவர் தமிழில் ரஜினியுடன் ‘காலா’, அஜித்துடன் ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: ‘தவறான நிர்வாகமே காரணம்..’: சந்தோஷ் நாராயணன்
இந்நிலையில், ஹூமா குரேஷி ‘செபா - ஆன் ஆக்சிடெண்டல் சூப்பர்ஹீரோ’ (zeba an accidental superhero) என்கிற பெயரில் எழுதிய தன் முதல் நாவலை பெங்களூரு இலக்கிய விழாவில் வெளியிட்டுள்ளார்.
1990-களிலிருந்து கரோனா காலம் வரை நடக்கும் பேண்டஸி கலந்த கதையாக இது இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.