முதல் நாவலை வெளியிட்ட ஹூமா குரேஷி!

நடிகை ஹூமா குரேஷி தன் முதல் நாவலை வெளியிட்டுள்ளார்.
முதல் நாவலை வெளியிட்ட ஹூமா குரேஷி!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹூமா குரேஷி. ’கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்ற இவர் தமிழில் ரஜினியுடன் ‘காலா’, அஜித்துடன் ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஹூமா குரேஷி ‘செபா - ஆன் ஆக்சிடெண்டல் சூப்பர்ஹீரோ’ (zeba an accidental superhero) என்கிற பெயரில் எழுதிய தன் முதல் நாவலை பெங்களூரு இலக்கிய விழாவில்  வெளியிட்டுள்ளார்.

1990-களிலிருந்து கரோனா காலம் வரை நடக்கும் பேண்டஸி கலந்த கதையாக இது இருக்கும் எனக் கூறியிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com