நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக வர உள்ளது.
தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் இயக்கி, நடித்த தனுஷ் - 50 படத்தின் படப்பிடிப்பும் முடிந்துள்ளது.
இதனையடுத்து, நடிகர் தனுஷ் தன் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார்ஸ் நிறுவனம் மூலம் தான் இயக்கவுள்ள புதிய படத்தையும், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படங்கள் என மூன்று படங்களை அடுத்தடுத்துத் தயாரிக்க உள்ளார்.
இதையும் படிக்க: பிரபாஸின் ரத்த பூமி .. சலார் - திரை விமர்சனம்
சில ஆண்டுகளாக படத் தயாரிப்பை விட்டு விலகியிருந்து தனுஷ், மீண்டும் தயாரிப்பாளாராக களமிறங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.