நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அறம். இப்படத்திற்குப் பின் நயன்தாராவின் மீதான கதாநாயகி பிம்பம் மேலும் உயர்ந்தது.
அதேநேரம், படத்தின் இயக்குநர் கோபி நயினார் அடுத்ததாக புதிய திரைப்படத்தை இயக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைப் பின் நடிகர் ஜெய்யை நாயகனாக வைத்து ‘கருப்பர் நகரம்’ என்கிற படத்தின் படப்பிடிப்பை துவங்கினார்.
இதையும் படிக்க: ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்கு தேர்வான விடுதலை!
தற்போது, அகரன் காலணி என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின்போது லைட்மேன் சண்முகம் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பலியானவரின் உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.