போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24) வினாத்தாள் கசிவுக்கு எதிராக அடுத்த வாரம் மசோதா தாக்கல்! இன்று நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் வாபஸ்தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
/

34 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் நடிக்கும் நடிகை!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.

News image
Updated On :3 மார்ச் 2023, 3:13 pm IST

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவருடைய 170-வது படத்தை ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவிதா டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1984-ல் வெளியான ‘உறவைக் காத்த கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, செல்வி, நானே ராஜா நானே மந்திரி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகை ஜீவிதா

நடிகை ஜீவிதா

பின், நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். இசை- ஏ.ஆர்.ரஹ்மான். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.