பொன்னியின் செல்வனை மாட்டிவிட்ட வானதி: வைரலாகும் புகைப்படம்! 

பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி தூங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
பொன்னியின் செல்வனை மாட்டிவிட்ட வானதி: வைரலாகும் புகைப்படம்! 
Published on
Updated on
1 min read

எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’.

முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது. 

பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக நடித்த ஷோபிதா இணைந்து படப்பிடிப்பில் நடனமாடிய விடியோ இணையத்தில் 2 நாள்கள் முன்பு வைரலானது. இந்நிலையில் நடிகை ஷோபிதா பகிர்ந்த புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. 

படப்பிடிப்பில் ஜெயம் ரவி உறங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவிற்கு நடிகை த்ரிஷா கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com