எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’.
முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது.
இதையும் படிக்க: மாமன்னன் படத்தின் புதிய போஸ்டர்: ரிலீஸ் எப்போது தெரியுமா?
பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக நடித்த ஷோபிதா இணைந்து படப்பிடிப்பில் நடனமாடிய விடியோ இணையத்தில் 2 நாள்கள் முன்பு வைரலானது. இந்நிலையில் நடிகை ஷோபிதா பகிர்ந்த புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
இதையும் படிக்க: நான் வழக்கறிஞர் என்பதால் சீரியஸான ஆள் கிடையாது: அதிதி பாலன்
படப்பிடிப்பில் ஜெயம் ரவி உறங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவிற்கு நடிகை த்ரிஷா கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.