கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார்கள்.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
நவ.10ஆம் நாள் வெளியான இந்தப்படத்துக்கு பெருவாரியான ஆதரவுகள் குவிந்துள்ள நிலையில் பிரபல தமிழ் சினிமா இயக்குநர்களும் ஜிகர்தண்டா படத்தினை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: இறுதிக் கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி 51!
ஷங்கர்:
“கார்த்திக் சுப்புராஜின் சிறந்த, அற்புதமான திரைக்கதை மற்றும் இயக்கம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. கதை- சினிமாவை மதித்தல். எதிர்பாராத 2ஆம் பகுதி. இரண்டு கதாபாத்திரங்களுக்கு மத்தியாலான டிராமா சூப்பராக இருந்தது. சந்தோஷ் நாராயணின பின்னணி இசை அற்புதமாக இருந்தது. லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பு சிறப்பு” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: சென்னை திரும்பினார் நடிகர் விஜய்!
நெல்சன்:
ஜிகர்தண்டா படத்தின் புதுமையான கதைக்களத்தினாலும் படத்தின் கிராப்ட்டையும் மிகவும் ரசித்து பார்த்தேன். மேலும் சிறப்பாக நடித்திருந்தார்கள். கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்.
மாரி செல்வராஜ்:
கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா பட வெற்றிக்கு மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசை பழைய நினவுகளை வெளிக்கொணர்ந்தது. அற்புதமான நடிப்பு.
மேலும் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அறிவழகன் போன்றோரும் படத்தினை வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.