தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. பழிவாங்கும் கதையாக உருவாகிவரும் இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்கிறார். 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததுள்ளதாக கடந்த ஜூனில் படக்குழு தெரிவித்திருந்தது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ‘விஜேஎஸ்51’எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜிகர்தண்டா மலையரசி (நிமிஷா) பதிவிட்ட புகைப்படங்கள்!
இந்தப்படத்தில் ருக்மணி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. ஜஸ்டின் பிராபகரன் இசையமைக்க உள்ளார்.
இதையும் படிக்க: கையில் தீப்பந்தம்: புதிய போஸ்டரை வெளியிட்ட கங்குவா படக்குழு!
இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தீபாவளி வாழ்த்து தெரிவித்த படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படம் டிச.15ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.