நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் புதிய படத்தை இயக்க உள்ளார்.
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குநர் சேரன். இவரது இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். கடைசியாக சேரன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு திருமணம் என்கிற படம் வெளியானது. அதன் பிறகு சேரன் எந்த படங்களையும் இயக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்த படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இது கிச்சா சுதீப் நடிக்கும் 47வது படம் ஆகும்.
கிச்சா சுதீப் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் புதிய படம் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.