‘ஆனந்தம்’, ‘ரன்’, 'சண்டக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தன்னை சிறந்த இயக்குநராக நிரூபித்தவர் இயக்குநர் லிங்குசாமி.
ஆனால், அவர் அடுத்தடுத்து இயக்கிய, ‘வேட்டை’, ‘அஞ்சான்’, ‘சண்டைக்கோழி - 2’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால், லிங்குசாமியை அணுக தயாரிப்பாளர்கள் தயங்கி வந்தனர்.
இதையும் படிக்க: இது பிளாக்பஸ்டர்தான்.. ரசிகர்கள் பாராட்டில் இறைவன் டிரைலர்!
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் லிங்குசாமி புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அதில் நாயகனான நடிகர் சூரி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.