முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ஜெயிலர் - வர்மனாக நடித்திருக்க வேண்டிய நடிகர் இவரா?

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்திருக்க வேண்டிய நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 12:49 pm IST

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜெயிலரில் தன் எதார்த்த நடிப்பால் கொடூரமான வில்லனாக(வர்மா) திரையில் தோன்றிய  நடிகர் விநாயகன் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளார்.

இந்நிலையில், முதலில் வர்மா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மம்மூட்டியிடம் ரஜினி பேசியதாகவும் ஆனால், சில காரணங்களால் மம்மூட்டி நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால்,  இயக்குநர் நெல்சன் விநாயகனை அணுகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

இதையும் படிக்க | பாபா குகையில் ரஜினி!

ஜெயிலரில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பிற மொழி சூப்பர் ஸ்டார்கள்  நடித்ததால் இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மம்மூட்டியும் இணைந்திருந்தால்  கொண்டாட்டமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.