மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ஆதரவும் எதிர்ப்பும் பெறும் நடிகர் ரஜினியின் செயல்! 

நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. 

Published On :

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆக.10இல் திரையரங்குகளில் வெளியானது. முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

படம் வெளியான பிறகு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றார். நேற்று காலை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்தார். இதயனையடுத்து மாலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் துணை முதல்வருடன் ரஜினி படம் பார்த்தார். 

லக்னௌவில் முதல்வர் யோகி ஆதியநாத் இல்லத்தில் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நடிகர் ரஜினியின் விடியோ இணையத்தில் வைரலானது. ரஜினி செய்தது தவறெனவும் ரஜினி செய்தது  தவறில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Story image

“தன்னைவிட வயதில் குறைந்தவர் காலில் விழுவது சரியில்லை”, “காலா படத்தில் நடித்த ரஜினியா இது?” “சுயமரியாதை என்பது இதுவா?” என இணையவாசிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரஜினி ரசிகர்கள் யோகி ஆதியநாத் துறவி போன்றவர் அவரது காலில் விழுந்தது தவறில்லை எனவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.