காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

‘வாரிசு’ தயாரிப்பாளருடன் நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர்!

தயாரிப்பாளர் தில் ராஜூவுடன் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரண் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Published On :

தயாரிப்பாளர் தில் ராஜூவுடன் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரண் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க, அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் ஷங்கருடன் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

இந்நிலையில் படக்குழு ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினாரில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. நடிகை கியாரா அத்வானிக்கு சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்லோத்ராவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு படக்குழு பூத்தூவி திருமண வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

இதில் தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். வாரிசு படத்தின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தயாரிப்பாளர் தில் ராஜூ. இந்தப் படம் ரூ.300 கோடி தாண்டி வசூலித்து வருவது குறிப்பிட்டத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.