டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்குக் காரணம்? ..வசனம் எழுதும் பிரபல நடிகை!

இயக்குநர் திருச்செல்வம் இயக்கி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வல்லமை தாராயோ தொடரில் வசனம் எழுத உதவிபுரிந்தார் ஸ்ரீவித்யா.

News image
Updated On :27 ஜூன் 2023, 9:17 pm IST


எதிர்நீச்சல் தொடருக்கு இல்லத்தரசிகளிடையேயும் பார்வையாளர்கள் இடையேயும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. 

இந்தத் தொடரின் வெற்றியில் முக்கிய பங்காற்றுகிறது கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள். இதனை தமிழ் சின்னத் திரை நடிகை ஒருவர்தான் எழுதி வருகிறார். 

எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் அத்தொடருக்கு வசனம் எழுதிவரும் ஸ்ரீவித்யா. இவர் கோலங்கள், ஆனந்தம், தென்றல் போன்ற தொடர்களில் நடித்தவர். 

என்னவளே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற திரைப்படங்களிலும் ஸ்ரீவித்யா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

Story image

கல்லூரி பருவத்திலிருந்தே படிப்பில் அதீத ஆர்வம் கொண்ட இவர், நடனத்திலும் தேர்ந்தவராக இருந்துள்ளார். நடனம் மூலம் சின்னத் திரை நடிகையாகவும் மாறினார். 

இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம், தென்றல் போன்ற தொடர்களில் நடித்தார். 

Story image

திருமணத்துக்குப் பிறகு சின்னத் திரையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் திருச்செல்வம் இயக்கி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வல்லமை தாராயோ தொடரில் வசனம் எழுத உதவிபுரிந்தார். 

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் கவனத்தை ஈர்த்த எதிர்நீச்சல் தொடரிலும் வசனம் எழுதி வருகிறார். இந்தத் தொடரையும் திருச்செல்வமே இயக்கி வருகிறார். 

Story image

பழமைவாதம் நிறைந்த புகுந்த வீட்டிற்குச் செல்லும் மருமகள்கள் சந்திக்கும் இன்னல்களை இந்தத் தொடர் கருவாகக் கொண்டுள்ளது. மருமகள்கள் மூலம் கால மாற்றத்துக்கு ஏற்ப பிற்போக்குத் தனங்களை தட்டிக்கேட்கும் வகையில் எதார்த்தமாக திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது. 

இதில் வட்டார வழக்கில் மாமனார் பேசும் வசனங்கள் மற்றும் தைரியமாக மருமகள்கள் பேசும் வசனங்கள், வீட்டில் உள்ள பாட்டி பேசும் வசனங்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே கதாபாத்திரங்களை ஒன்றிப்போகச் செய்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஸ்ரீவித்யா எழுதிவரும் வசனங்கள்தான் என இணையத்தில் அவரைப் பலர் புகழ்ந்து வருகின்றனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.