பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் புரோமோஷனுக்காக கிளிம்ஸ் விடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இதையும் படிக்க: 'எனக்கு நண்பர்களே இல்லை..’: செல்வராகவன் உருக்கம்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும், இப்படத்தை வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷனுக்காக நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி படப்பிடிப்பு குறித்து பேசும் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.