பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

‘ஜாலியான சேட்டை பிடித்த நண்பர்...’- லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து கூறிய மாளவிகா! 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளுக்கு நடிகை மாளவிகா மோகனன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Published On :

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வங்கிப் பணியிலிருந்து சினிமா மீதான ஈர்ப்பினால் படம் இயக்க வந்தவர்.

கைதி, மாஸ்டர் படங்களில் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். விக்ரம் படத்தின் மூலம் இந்திய சினிமாவிலே அவருக்கென தனி ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். குறுகிய காலத்திலே இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநராக உருவாகியுள்ளார். 

தற்போது நடிகர் விஜய் உடன் ‘லியோ’ படத்தினை இயக்கி வருகிறார். காஷ்மீரில் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. 

37வது பிறந்தநாளை கொண்டாடும் லோகேஷூக்கு நடிகை மாளவிகா மோகனன் வாழ்த்து கூறியுள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா விஜய்யுடன் நடித்திருந்தார். 

மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

ஜாலியான சேட்டை பிடித்த நண்பர். அவருடன் எப்போதும் உரையாடல் நடந்துகொண்டே இருக்கும். அவருடன் இருக்கும்போது மந்தமான சூழ்நிலையே இருக்காது. சென்னையை எனது வீடு போல உணரவைத்தவர். மேலும் உயர உயர பறந்து செல்லுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.