நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டோவினோ தாமஸை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்! 

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸை லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார். 

News image
Updated On :28 மே 2023, 11:24 am IST

தமிழில் மாரி 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். ஆனால் மலையாளத்தில் 2012லியே நடிக்க ஆரம்பித்தார். என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மண்டே பேரு, மின்னல் முரளி, தல்லுமாலா என பல அற்புதமான படங்களில் நடித்துள்ளார். 

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில் டோவினோ நடித்துள்ளார். கேரளத்தில் மே 5ஆம் தேதி வெளியான  இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

Story image

2022இல் வெளியான தல்லுமாலா திரைப்படம் அதன் படமாக்கும் வித்ததிற்காக வெகுவாக பாராட்டப்பட்டது. இந்தப் படத்தினை பார்த்துதான் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார். எதிர்பாராத ஒன்றாக இந்த வாழ்த்து இருந்ததாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் டோவினோ தாமஸ் இதனை தெரிவித்துள்ளார்.

லோகேஷ் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் டோவினோ தாமஸ். விரைவில் நடக்குமெனவும் அந்த நேர்காணலில் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.