இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்: நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு!

நடிகை நயன்தாரா தனது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார். 
இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்: நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு!
Published on
Updated on
2 min read

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது. 

இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தற்போது அன்னபூரணி படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். 

அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்கள். நயன்தாராவின் 39வது பிறந்தநாளில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா குடும்பத்துடன் இருக்கும் விடியோவை பகிர்ந்து, “இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும். இந்த 3 ஆண்களுடன் கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார். என்னுடைய உயிர், உலக், விக்னேஷ் சிவன் உங்களை காதலிக்கிறேன்” என ரத்தமாரே பாடலுடன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com