கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.
இதையும் படிக்க: கறுப்பாக இருந்தால் அழகில்லையா?: கார்த்திக் சுப்புராஜ் ஆவேசம்!
ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. அதற்கு இந்தியா பழித்தீர்க்குமா? என ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திரவீரரும் சிஎஸ்கேவின் செல்லப் பிளையுமான ரவீந்திர ஜடேஜவுக்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தமிழ் கற்றுக் கொடுத்தார். அதில் ஜடேஜா பேசிய “கப்பை தூக்குறோம்” “அடி அடினு அடிக்கிறோம்” என்ற தமிழ் வார்த்தைகள் அழகாக இருந்தது. இந்த விடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இன்று மதியம் 2 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.