5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

த்ரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்சை பேச்சு: குவியும் கண்டனங்கள்!

லியோ திரைப்படத்தில் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சியே இல்லை என்று திரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா மற்றும் லோகேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

News image
Updated On :19 நவம்பர் 2023, 9:49 am IST

லியோ திரைப்படத்தில் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சியே இல்லை என்று திரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா மற்றும் லோகேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில், லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று சர்சைக் கருத்தை தெரிவித்தார்.

மன்சூர் அலிகானின் இந்த சர்சை பேச்சு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமா பேசிய விடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்" எனத் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

"பெண்களைப் பற்றி இந்த மனிதர் கொண்டிருக்கும் எண்ணங்களை நினைத்துப் பார்க்கவே அவமானமாக உள்ளது" என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

"மன்சூர் அலி கான் கூறிய கருத்துக்கள் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியுள்ளோம். பெண்கள், சக கலைஞர்கள் அனைவருக்கும் மரியாதை வழங்கப்பட வேண்டும்" என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.