மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

பீஸ்ட் படத்தை கிண்டல் செய்ததற்கு நெல்சனிடம் மன்னிப்பு கேட்கும் ரசிகர்கள்! காரணம் பிரதமர் மோடியா?

இது தெரியாமல் கிண்டல் செய்து விட்டோம் என பிரபல இயக்குநர் நெல்சனிடம் சினிமா ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுவருகின்றனர். 

Published On :2 பிப்ரவரி 2024, 8:55 am IST

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. 

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என தயாரிப்பாளர் கூறியிருந்தார்கள். 

Story image

சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் க்ளைமாக்ஸில் ஜெட்டில் போகும்போது மாஸ்கை கழட்டிவிட்டு வணக்கம் வைக்கும் காட்சியை வைத்து இயக்குநர் நெல்சனை கிண்டல் செய்து வந்தனர். 

Story image

தற்போது நமது நாட்டின் பிரதமர் மோடி பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தை  சனிக்கிழமை பாா்வையிட்டார். மத்திய பாஜக ஆட்சியின் கீழ் ரூ. 36,468 கோடி மதிப்பில் 83 இலகுரக தேஜஸ் போா் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். 

Story image

பிறகு தேஜஸ் விமானத்தில் மோடி பயணித்தார். இந்த விடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதில் பிரதமர் மோடி மாஸ்கினை கழட்டி கை அசைத்து வருவார். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயக்குநர் நெல்சனிடம் ரசிகர்கள் மன்னிப்பு கெட்டு வருகின்றனர்.

தெரியாமல் கிண்டல் செய்துவிட்டோமென பலரும்  ஜாலியாக மீண்டும் பீஸ்ட்- நெல்சன் குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.