தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’ மற்றும் ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றன.
நானியின் 30வது படமாக ஹாய் நான்னா படம் உருவாகிவருகிறது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடிக்கிறார்.
இதையும் படிக்க: லியோ ரூ.1,000 கோடி வசூலிக்காது: தயாரிப்பாளர் லலித்
இந்நிலையில் நானியின் 31வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிப்பில் அடடே சுந்தரா படக்குழுவுடன் நானி மீண்டும் இணைகிறார்.
இதையும் படிக்க: மருத்துவமனையில் நடிகை சுனைனா: ரசிகர்கள் அதிர்ச்சி!
அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. அக்.23,24ஆம் தேதிகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.