வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடரில் இணையும் முக்கிய பிரபலம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

News image
Updated On :22 அக்டோபர் 2023, 1:58 pm IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடர் அண்ணன், தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது. இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தத் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ளது.

அஜய் ரத்னம்.

அஜய் ரத்னம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. அதில் வரும் அக்.30 ஆம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின் தொடர்ந்து நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனம் கதாபாத்திரத்தில் நிரோஷா நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக எடுக்கப்பட்டது.

ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகம் தந்தை - மகன் பாசத்தை அடிப்படை கொண்ட கதையாக தெரிகிறது. 

இந்த நிலையில், இத்தொடரில் நடிகர் அஜய் ரத்னம் இணைந்துள்ளார். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தில் எந்த கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.