நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சமுத்திரக்கனியின் திரு.மாணிக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் திரு.மாணிக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 2:27 pm IST


சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் திரு.மாணிக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்து தெலுங்கில் வெளியான விமானம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில், நந்தா பெரியசாமி இயக்கத்தில் திரு.மாணிக்கம் என்ற திரைப்படத்தில் தற்போது சமுத்திரக்கனி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘நாடோடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா நடிக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா,  இளவரசு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும், ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Story image

மேலும், படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் டீசர் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.