ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

2,000 ரூபாயில் படமெடுத்து ரூ.75 லட்சம் சம்பாதித்தேன்: ராம் கோபால் வர்மா

இயக்குநர் ராம் கோபால் வர்மா குறைந்த செலவில் படமியக்கி பெரிய லாபம் பார்த்துள்ளதாக கூறியுள்ளார். 

Published On :

பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா (ஆர்ஜிவி) தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முக்கியமான படங்களை இயக்கியுள்ளார். தற்போதைய முக்கியமான இயக்குநர்களுக்கு ரோல்மாடலாக ராம் கோபால் வர்மா இருக்கிறார்.  

ராம் கோபால் வர்மாவின் சிவா, சத்யா, ரங்கீலா, சர்கார் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது சிறிய அளவிலான படங்களினை இயக்கி வருகிறார்.

சர்ச்சையான கருத்துகளை பேசியும் நடிகைகளுடன் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டும் அடிக்கடி டிரெண்டிங்கிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார். 

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஆர்ஜிவி, “நான் நிறைய வெற்றிப் படங்களும் தந்திருக்கிறேன். தோல்விப்படங்களும் தந்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் என்னைப் பொருத்தவரை எல்லாம் சமமான படங்களே. அதன் வசூல் விபரங்களால் அதை பிரித்துவிடுவதில்லை. கரோனா காலக்கட்டத்தில் நான் பல படங்களை இயக்கினேன். ரூ.2000 செலவில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் மூலம் ரூ.75 லட்சம் சம்பாத்தித்து இருக்கிறேன். எனக்கு பணம் எப்போதும் பிரச்னை இல்லை. தற்போது புதிய படம் ஒன்று இயக்கவிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.