அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

2,000 ரூபாயில் படமெடுத்து ரூ.75 லட்சம் சம்பாதித்தேன்: ராம் கோபால் வர்மா

இயக்குநர் ராம் கோபால் வர்மா குறைந்த செலவில் படமியக்கி பெரிய லாபம் பார்த்துள்ளதாக கூறியுள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:31 am IST

பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா (ஆர்ஜிவி) தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முக்கியமான படங்களை இயக்கியுள்ளார். தற்போதைய முக்கியமான இயக்குநர்களுக்கு ரோல்மாடலாக ராம் கோபால் வர்மா இருக்கிறார்.  

ராம் கோபால் வர்மாவின் சிவா, சத்யா, ரங்கீலா, சர்கார் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது சிறிய அளவிலான படங்களினை இயக்கி வருகிறார்.

சர்ச்சையான கருத்துகளை பேசியும் நடிகைகளுடன் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டும் அடிக்கடி டிரெண்டிங்கிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார். 

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஆர்ஜிவி, “நான் நிறைய வெற்றிப் படங்களும் தந்திருக்கிறேன். தோல்விப்படங்களும் தந்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் என்னைப் பொருத்தவரை எல்லாம் சமமான படங்களே. அதன் வசூல் விபரங்களால் அதை பிரித்துவிடுவதில்லை. கரோனா காலக்கட்டத்தில் நான் பல படங்களை இயக்கினேன். ரூ.2000 செலவில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் மூலம் ரூ.75 லட்சம் சம்பாத்தித்து இருக்கிறேன். எனக்கு பணம் எப்போதும் பிரச்னை இல்லை. தற்போது புதிய படம் ஒன்று இயக்கவிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.