‘மாநகரம்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் நடித்ததாலும் புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி படம் என்பதாலும் ‘மைக்கேல்’ மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்த்த இந்தப்படம் வசூலில் சோபிக்கவில்லை. மேக்கிங் நன்றாக இருந்தும் கதை மோசமாக இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிக்க: படப்பிடிப்பில் அந்த ஹீரோ என்னை துன்புறுத்தினார்: நித்யா மேனன்
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் சந்தீப் கிஷன், “உண்மையான உழைப்பினை கொடுத்தோம். இருந்தும் சரியாக அமையவில்லை. இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அந்த படப்பிடிப்பு அனுபவங்கள் நன்றாக அமைந்தது” எனக் கூறினார்.
A genuine effort which failed to deliver ..almost there but not..we should have been more careful .. nevertheless a team and an experience that I cherish..
â Sundeep Kishan (@sundeepkishan) September 25, 2023
மேலும் ரசிகர் ஒருவர், “மைக்கேல் படம் மூலம் தாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?” எனக் கேட்டதற்கு, “எடிட்டிங் ஒரு படத்தினை உருவாக்கும் அல்லது உடைக்கும் என்பதனை மைக்கேல் படத்தின் மூலம் உணர்ந்தேன்” எனக் கூறினார் சந்தீப் கிஷன்.
Editing Can make or Break a film :)
â Sundeep Kishan (@sundeepkishan) September 25, 2023
இதன் மூலம் மைக்கேல் பட தோவிக்கு எடிட்டர் சத்யநாராயணனின் எடிட்டிங்தான் காரணம் என மறைமுகமாக கூறியுள்ளார்.
மாநகரம் பட வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனனின் மைக்கேல் படம் சரியாக அமையவில்லை. இந்நிலையில் மாயவன் 2 படம் மீண்டும் அவருக்கு புகழை தருமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30.7.2026) 12 ராசிகளுக்கும்! வாய்ப்புகள் தேடிவரும் துலா ராசிக்கு!!

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 30) - இந்த ராசிக்கு லாபம்!
கரூா் மாவட்ட கோயில் நிலங்கள் பத்திரப் பதிவு விவகாரம்: தடை நீக்கத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு





