அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ரயிலில் பயங்கரம்.. நடிகரைக் கொன்ற வடமாநிலத் தொழிலாளி!

ரயில் டிக்கெட் பரிசோதகரும் நடிகருமான வினோத்தை வடமாநிலத் தொழிலாளி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 5:09 pm IST

மலையாள சினிமாவில் புலிமுருகன் உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்து கவனம் பெற்றவர் கே.வினோத். இவர், ரயில் டிக்கெட் பரிசோதகராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.2) இரவு பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் எர்ணாகுளத்திலிருந்து ஈரோடு வரை டிக்கெட் பரிசோதிக்கும் பணியில் இருந்திருக்கிறார்.

அப்போது, ரயில் திருச்சூர் தாண்டியதும் டிக்கெட் இல்லாமல் பயணித்த வடமாநிலத் தொழிலாளிகளிடம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கச் சொன்னதுடன் ரூ.1000 அபராதம் விதிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, வடமாநிலத் தொழிலாளி ஒருவருக்கும் வினோத்தும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது. அந்த நேரத்தில், கதவருகே நின்றிருந்த வினோத்தை அத்தொழிலாளி ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக, மற்றொரு இருப்புப்பாதையில் வந்துகொண்டிருந்த ரயிலில் உடல்நசுங்கி வினோத் இறந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், காவல்துறைக்கு தகவலைச் சொல்ல நடிகர் வினோத்தைத் தள்ளிவிட்ட வடமாநிலத் தொழிலாளி பாலக்காட்டில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஓரிஸாவைச் சேர்ந்த அத்தொழிலாளியின் பெயர் ரஜினிகாந்த் என்றும் சம்பவத்தன்று அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்திருக்கிறது.

சினிமாவின் மீதான ஆசையில் டிக்கெட் பரிசோதகர் பணியுடன் நடித்துக் கொண்டிருந்தவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.