
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன.
அர்ஜுன் ரெட்டி புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
ராஷ்மிகா மந்தனா நடிகர்கள் அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது ராஷ்மிகாவின் 28வது பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீ வள்ளி (புஷ்பா 2) கதாபாத்திர போஸ்டர்!
இந்த அபார வரவேற்புக்கு நடிகை ராஷ்மிகா மிகவும் நெகிழ்ச்சியடைந்து, “உங்களது அனைத்து ட்வீட்டுகளையும் பார்க்கிறேன். அனவருக்கும் பதிலளிக்க ஆசைப்படுகிறேன்.(கண்ணீர் ததும்பும் எமோஜிக்களுடன் இதயம் எமோஜி). எனக்காக நீங்கள் செய்த டிரெண்டிங், சிடிபி (பொதுவான முகப்பு படங்கள்), படத்தொகுப்புகள், சிறிய பதிவுகள் என அனைத்துக்கும் எனது அன்பு. அனைவரையும் நேசிக்கிறேன்!
நீங்கள்தான் சிறந்தவர்கள்!!! ஆறத்தழுவிக் கொள்கிறேன்!” என நெகிழ்வாகப் பதிவிட்டுள்ளார்.
Seeing all your tweets.. wanted to reply to all of you.. ð¥ºð¥ºâ¤ï¸ the trend you guys did for me.. the CDP .. everything.. the edits.. the lil notes.. ð¥ºð«¶ð»ð«¶ð»ð«¶ð»ð«¶ð»ð«¶ð»
— Rashmika Mandanna (@iamRashmika) April 4, 2024
Awww.. I love you guysssss!
You are the bestest!!!!
Big hugs! â¤ï¸â¤ï¸â¤ï¸â¤ï¸
மேலும் ரசிகர்கள் சிலரின் படத்தொகுப்புகளையும் பகிர்ந்து நன்றியை தெரிவித்து வருகிறார்.
ð¥ºð¥ºð¥ºð¥ºð¥º TN ð thankyou @Sugumar_Tweetz https://t.co/Cn5RLQQGTs
— Rashmika Mandanna (@iamRashmika) April 5, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










