அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

விருதுகளைக் குவிக்கும்... நம்பிக்கையில் தங்கலான் படக்குழு!

தங்கலான் திரைப்படம் பல விருதுகளைப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:05 pm IST

தங்கலான் திரைப்படம் பல விருதுகளைப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

நடிகர் விக்ரம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனால், இதன் புரோமோஷன் நிகழ்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் இணைந்து பல நேர்காணல்களில் கலந்துகொள்கின்றனர்.

கோலார் தங்கச் சுரங்கத்தில் எப்படி தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது, சுரங்கத்தொழிலுக்காக மக்கள் அடிமைப்படுத்தப்பட்டது குறித்த படமாக இது உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

தங்கலான் படக்குழு.

தங்கலான் படக்குழு.

மேலும், நடிகர் விக்ரமின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பேசப்படும் எனத் தெரிகிறது. படத்தின் தயாரிப்பில் இருந்த தனஞ்செயன் இப்படம் ஆஸ்கர் வரை செல்லும் எனக் கூறியிருக்கிறார்.

முக்கியமாக, தேசியளவிலும் பல உலகத்திரைப்பட விழாவுக்கும் இப்படத்தை அனுப்பும் முடிவில் இருப்பதால் தங்கலான் பல விருதுகளைக் குவிக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர் படக்குழுவினர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.