பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ... ரஜினியின் பேச்சைக் கேட்டு சிரித்த முதல்வர்!

புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசியுள்ளார்.

News image

நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு. க. ஸ்டாலின்.

Updated On :24 ஆகஸ்ட் 2024, 3:52 pm

நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் மு. க .ஸ்டாலின், ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இங்கு வந்ததும் என்னிடம் நீங்கள் பேசுகிறீர்களா? எனக் கேட்டனர். வந்தபிறகு பேசாமல்போக முடியுமா? அறிவாளிகள் இருக்கிற இடத்தில் பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம். ஆனால், என்ன செய்வது... இப்போது பேசி ஆக வேண்டிய சூழ்நிலை. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய விதம் சிறப்பு. உலகத்தில் எந்த தலைவருக்கும் இப்படியொரு நூற்றாண்டு விழா நடந்ததில்லை. இனி கொண்டாடப்போவதும் இல்லை.

படையப்பா திரையிடலின்போது கலைஞர் வந்திருந்தார். சில இருக்கைகள் தள்ளி ஓரமாக முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். நான் அருகில் அழைத்தேன். அவர் தன் தந்தைக்கு மரியாதை கொடுத்து வரவில்லை. நான் ஆச்சரியப்படுகிற விஷயம், ஒரு பள்ளி ஆசிரியருக்கு புதிய மாணவர்களால் எந்த பிரச்னையும் இல்லை. பழைய மாணவர்களைத்தான் சமாளிக்க முடியாது.

இந்தப் பழையவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வகுப்பைவிட்டு செல்லாமல் இருப்பவர்கள். இங்கும் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கின்றனர். அதிலும், துரை முருகன் என ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர். இவர்களையெல்லாம் வைத்து கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ... முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு என் வாழ்த்துகள்” என்றார்.

இதைக்கேட்டு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரங்கத்தினர் அனைவரும் சிரித்தனர்.

ஸ்டாலின் பதில்: ரஜினிகாந்தின் பேச்சுக்கு தனது தலைமையுரையின் நிறைவாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியது:

புத்தக வெளியீட்டு விழாவுக்கு முத்தாய்ப்பு வைத்தது போன்று மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தும் வகையில் நடிகா் ரஜினிகாந்த் பேசினாா். அவா் கூறிய அனைத்தையும் நான் புரிந்து கொண்டேன். அவா் பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிட மாட்டேன். அனைத்திலும் உஷாராக இருப்பேன் என்ற உறுதியை அவருக்குத் தெரிவிக்கிறேன் என்றாா்.

நடிகா் ரஜினிகாந்தின் பேச்சும் அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினின் பதிலும் புத்தக வெளியீட்டு விழா மேடையை கலகலப்பாக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.