உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின்

தந்தையாக மட்டுமல்ல, எனக்கு தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் ஸ்டாலின்.

Updated On :24 ஆகஸ்ட் 2024, 9:32 pm IST

தந்தையாக மட்டுமல்ல, எனக்கு தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியதாவது, விழாவுக்கு வருகை தந்து, என்னை ஊக்கப்படுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி. என்னை விட ஒரு வயது பெரியவரான ரஜினியின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட வேண்டாம். அனைத்திலும் நான் உஷாராகவே இருப்பேன். தந்தையாக மட்டுமல்ல, எனக்கு தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி. அமைச்சர்கள், தொண்டர்கள் என அனைவருக்கும் தாயாக வாழ்ந்தவர். ரஜினிகாந்த், உள்ளிட்டோரும் அவரின் உடன்பிறப்புகள் தான்.

அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களையும் அரவணைத்து சென்றவர் கருணாநிதி. கருணாநிதி எழுதினால் தமிழ் கொட்டும் என்பதுபோல் கருணாநிதியைப் பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும். உயிரினும் மேலாக உடன்பிறப்புகளை மதித்தவர் கருணாநிதி. இவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.