உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

News image

சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு.

Updated On :26 ஆகஸ்ட் 2024, 1:39 pm IST

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

தற்போது, கோட் புரமோஷனில் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “கோட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் இருக்கும். என் திரைவாழ்வில் என்னுடைய பெரிய படமும் இதுதான். நிச்சயம் ரசிகர்களைக் கவரும்.” என்றார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணையும் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, வெங்கட் பிரபு, ‘என் அடுத்த படம் சிவகார்த்திகேயனுடன்தான். அவருடைய படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு வந்தால் இந்தப் படம் துவங்கிவிடும்’ என பதிலளித்துள்ளார்.

இதனால், வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.