காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர்!

விடுதலை -2 படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக இயக்குநருக்கு நன்றிதெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர்.

News image

இயக்குநர் வெற்றிமாறனுடன் நடிகை மஞ்சு வாரியர். - படம்: இன்ஸ்டா / மஞ்சு வாரியர்.

Updated On :21 டிசம்பர் 2024, 12:15 pm IST

விடுதலை -2 படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் நேற்று (டிச. 20) திரையரங்குகளில் வெளியானது.

முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது.

முழுக்க முழுக்க அரசியல் படமாக விடுதலை - 2 உருவாகியுள்ளது. இதில் நடிகை மஞ்சு வாரியர் வரும் காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு இதமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

விடுதலை 2 படத்தில் மிகவும் முற்போக்கான கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ள மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, “ மகாலட்சுமி கதாபாத்திரத்துக்காக நன்றி வெற்றிமாறன் சார். தற்போது திரையரங்குகளில் விடுதலை -2” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, வெற்றிமாறனின் அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.