பிக் பாஸ் வீட்டுக்குள் முன்னாள் போட்டியாளர் விஷ்ணுவிடம் தனது காதலை செளந்தர்யா வெளிப்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி 12-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
அனைத்து போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றுள்ள நிலையில், தற்போது முன்னாள் போட்டியாளர் விஷ்ணு வீட்டுக்குள் வந்துள்ளார்.
இதையும் படிக்க : 2024 - சிறந்த மலையாளப் படங்கள்!
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிக்குள் இருக்கும் விஷ்ணுவின் தோழியான செளந்தர்யா ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என்று விஷ்ணுவிடம் கேட்கும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், செளந்தர்யாவை கட்டி அணைத்த விஷ்ணு அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷ்ணு, இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வீட்டுக்குள் இருந்தார். அந்த சீசனில் அடிக்கடி கோபம் கொள்ளும் விஷ்ணு மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
மேலும், விஷ்ணுவும் செளந்தர்யாவும் இணைந்து 'வேற மாறி ஆஃபிஸ்’ என்ற இணையத் தொடரில் நடித்து பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீங்கள் தமிழனா? இந்தியனா? மனக் குமுறலை வெளிப்படுத்திய அண்ணாமலை!

சிபிஎஸ்இ விடைத்தாள் குளறுபடிகளை வெளிப்படுத்திய மாணவருடன் ராகுல் சந்திப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 1 - நேரலை!

இனி பொதுமக்களும் பிக் பாஸில் பங்கேற்கலாம்! பிக் பாஸ் காமன்மேன்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



