திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பிக் பாஸ்: விஷ்ணுவிடம் காதலை வெளிப்படுத்திய செளந்தர்யா!

பிக் பாஸ் வீட்டில் முன்னாள் போட்டியாளர் விஷ்ணுவிடம் காதலை சொன்ன செளந்தர்யா..

News image

விஷ்ணுவிடம் காதலை வெளிப்படுத்திய செளந்தர்யா - Vijay TV

Updated On :27 டிசம்பர் 2024, 11:43 am IST

பிக் பாஸ் வீட்டுக்குள் முன்னாள் போட்டியாளர் விஷ்ணுவிடம் தனது காதலை செளந்தர்யா வெளிப்படுத்தியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி 12-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

அனைத்து போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றுள்ள நிலையில், தற்போது முன்னாள் போட்டியாளர் விஷ்ணு வீட்டுக்குள் வந்துள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிக்குள் இருக்கும் விஷ்ணுவின் தோழியான செளந்தர்யா ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என்று விஷ்ணுவிடம் கேட்கும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், செளந்தர்யாவை கட்டி அணைத்த விஷ்ணு அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷ்ணு, இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வீட்டுக்குள் இருந்தார். அந்த சீசனில் அடிக்கடி கோபம் கொள்ளும் விஷ்ணு மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

மேலும், விஷ்ணுவும் செளந்தர்யாவும் இணைந்து 'வேற மாறி ஆஃபிஸ்’ என்ற இணையத் தொடரில் நடித்து பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.