மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு! கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி, பொது தரிசனம் எப்போது?காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு; 23,200 ஐ கடந்த நிஃப்டி!!மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

மறுவெளியீடான வாரணம் ஆயிரம் கர்நாடகத்தில் வசூல் சாதனை!

சூர்யா நடிப்பில் உருவான வாரணம் ஆயிரம் திரைப்படம் மறுவெளியீட்டில் அசத்தி வருகிறது.

Published On :

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியானது.

அப்பா - மகனுக்கு இடையேயான உறவின் நெருக்கத்தை வாழ்க்கைப் பிரச்னைகளுடன் இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரத்திலும் சூர்யாவே நடித்து அசத்தியிருந்தார். 

இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இன்றும் நீடிக்கிறது. காதல், அதன் பிரிவு என உணர்ச்சிகளின் வேகத்திற்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த விதத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

சென்னையில், பிரபல திரையரங்கில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரைக்கு முன் ஆடி தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

சென்னை மட்டுமல்லாது கர்நாடகத்திலும் மறுவெளியீடு செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கர்நாடகத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டு வசூலில் கலக்கும் முதல் படம் வாரணம் ஆயிரம் எனவும் ரூ.75 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்துள்ளது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.