சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
நடிகை சாய் பல்லவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரேமம் படத்தில் அவர் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன் தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
இந்த நிலையில், பூஜா கண்ணன் அவரது திருமணம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "இதுவரை என்னுடைய க்ரைம் பார்ட்னராக இருந்த வினீத். இனி என் வாழ்க்கைத் துணையாக இருக்கப் போகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மகாராஜா இரண்டாவது போஸ்டர்!
இந்தப் பதிவில் பூஜா கண்ணன், வினீத்துடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இப்பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.