ஹிந்தி சினிமாவில் 2010இல் அறிமுகமானார் ரன்வீர் சிங். பத்மாவதி, சிம்பா, கல்லி பாய் என பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
1983 உலகக் கோப்பை வெற்றி பெற்றதை 83 என்ற திரைப்படமாக உருவாக்கி இருந்தார்கள். இந்தப் படத்தில் ரன்வீர் சிறப்பாக நடித்திருந்தார். கடந்தாண்டு வெளியான ராக்கி அவுர் ராணி திரைப்படம் வசூல் ரீதியாக அசத்தியது.
நடிகை தீபிகா படுகோனை திருமணம் செய்த ரன்வீர் சிங் அதிரடியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு சமூக வலைதளத்தில் எப்போதும் பிஸியாக இருப்பவர்.
தற்போது சிங்கம் 4 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரன்வீர் சிங் உடன் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால் நடிக்கிறார்கள். ஆதித்யா தார் இயக்கும் இந்தப் படத்தினை ஜியோ ஸ்டுடியோஸ், பி62ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

ஆர்டிகள் 360 போஸ்டர்
மிகவும் சர்ச்சையான தி சர்ஜிகல் ஸ்டிரைக், ஆர்டிகள் 360 ஆகிய படங்களை இயக்கிய ஆதித்யா தார் இந்தப் படத்தினை இயக்குகிறார்.
ஆதித்யா தார் நடிகை யாமி கௌதமின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ரன்வீர் சிங், “இது எனக்காக பொறுமையாக காத்திருந்த எனது ரசிகர்களுக்கானது. உரத்த குரலில் இதை அறிவிக்கிறேன். எனது அன்பான ரசிகர்களே இதுவரை பார்க்காத சினிமா அனுபவத்தை தருவேன் என சத்தியம் செய்கிறேன்.
ஊக்கம் நிறைந்த நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படும் பெரிய திரில்லர் படம் உங்கள் ஆசிர்வாதத்துடன் ஒளிர்கிறோம். இந்த முறை தனிப்பட்ட முறையிலானது” எனக் கூறியுள்ளார்.
This one is for my fans, who have been so patient with me, and been clamouring for a turn like this. I love you all, and I promise you, this time, a cinematic experience like never before.
— Ranveer Singh (@RanveerOfficial) July 27, 2024
With your blessings, we embark on this great, big motion picture adventure with spirited⦠pic.twitter.com/77piFkQsdY
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோனம் வாங்சுக், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மாநிலங்களவை தலைவருக்கு சஞ்சய் சிங் கடிதம்!

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை ஊழல்: எஸ்ஐடி முன்பு ஆம் ஆத்மி எம்.பி. ஆவணங்கள் சமா்ப்பிப்பு

சஞ்சய் ஏரியை உடனடியாக புனரமைக்க டிடிஏ-க்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு: 5,000 மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகரான ரன்வீர் சிங்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |





