விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கீழே தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை சந்தித்த நாகர்ஜுனா!

கீழே தள்ளிவிடப்பட்ட ஹைதராபாத் விமான ஊழியரை சந்தித்த நாகர்ஜுனா விடியோ வைரலாகியுள்ளது.

கீழே தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை சந்தித்த நாகர்ஜுனா - படங்கள்: எக்ஸ் / வைரல் பயானி

Published On :

குபேரா படப்பிடிப்புக்காக ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வந்த நாகர்ஜுனாவிடம் ரசிகர் ஒருவர் திடீரென நெருங்கினார். இதை நாகர்ஜுனா கவனிக்காமல் சென்றுகொண்டிருந்தார். ஆனால், அவரின் பாதுகாவலர் அந்த ரசிகரைப் பின்னால் இழுத்தார்.

இதில் நிலை தடுமாறிய ரசிகர் கீழே விழச்சென்றார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் எதுவும் நடக்காததுபோல் சென்ற நாகர்ஜுனாவைக் குறிப்பிட்டு மனிதத் தன்மையற்ற செயல் என ரசிகர்கள் அவரைக் கண்டித்து வருகின்றனர். நாகார்ஜுனாவுடன் நடிகர் தனுஷும் அங்கு உடன் வந்தது பெரிதும் சர்ச்சையை கிளப்பியது.

இந்தச் சம்பவத்துக்கு நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், “இது இப்போதுதான் எனது கவனத்துக்கு வந்தது. இது நடந்திருக்கக்கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருங்காலத்தில் இது இனிமேல் நடக்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த மாற்றுத்திறனாளி நபரை சந்தித்து பேசியுள்ளார் நாகர்ஜுனா. இந்தப் படங்கள் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன.

குபேரா படப்பிடிப்பில் நடிகர் தனுஷுடன் நாகர்ஜுனா இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சேகர் கமூலா இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.